தஞ்சை அருகே பயங்கரம்: கொடூரமாக தலித் இளம்பெண் படுகொலை!

மிகவும் துயரத்துடன் இருக்கிறேன்.

தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தோட்டி – தலித் சமூகத்தை சேர்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயது பெண்ணை ராஜா, குமார் என்கிற இரண்டு சாதிஇந்துக்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து உள்ளனர்.

அந்த பெண்ணின் வாயில், கிழிந்து போன ஜட்டியை வைத்து அடைத்து, கை கால்களை கட்டிப்போட்டு, கடுமையாக அடித்து சித்ரவதை செய்து, கொலை செய்து உள்ளனர்.

இந்த கிராமம் பூண்டி வாண்டையார் வசிக்கும் கிராமம்.

“அய்யா, வருடத்திற்கு இந்த பகுதியில் மட்டும் 15 – 20 பெண்களை ஆதிக்க சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்கின்றனர். போலீஸ் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. நாங்கள் உணர்ச்சியற்று பிணங்களாக வாழ்ந்து வருகிறோம் என்கின்றனர்.

சுவாதி படுகொலைக்கு எதிராக பெரிய அளவில் கொந்தளித்த நாம், கலைச்செல்வி படுகொலைக்கு அமைதியாக இருக்கிறோம். செய்திகூட வெளியே வரவில்லை. வெட்கமாக இருக்கிறது.

நீதியின் குரலில் அடிக்கும் பாகுபாட்டின் வாடை, 10 நாட்கள் அழுகிப்போன பிண வாடையைவிட நாறுகிறது. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கலைச்செல்வி, ” நீங்களும் பிணங்கள்தான். ஆனால், நான் புதைக்கப்பட்டு விட்டேன். நீங்கள் புதைக்கப்படவில்லை. இது ஒன்றுதான் வேறுபாடு” என்று சொல்லுவது போன்று இருந்தது.

சாரி கலைச்செல்வி… நீ பெரிய சாதியில் பிறந்து இருக்க வேண்டும். நகரத்தில் வசித்து இருக்க வேண்டும். ஐ.டி பணி செய்து இருக்க வேண்டும். ஆனால் நீயோ எளிய சாதியில் பிறந்து இருக்கிறாய். என்ன செய்வது?

இந்த செய்தியை பரப்புரை செய்யுங்கள் நண்பர்களே… “கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்” என்று பாடலை ரசிக்க செய்தால் மட்டும் போதாது. களத்தில் இருக்க வேண்டும்.

நாம் களத்தில் இருந்தால் கலைச்செல்வியை இழப்போமா?

– எவிடன்ஸ் கதிர்

சமூக செயற்பாட்டாளர்

0a3v