வழக்கு பதிவை வரவேற்பதாக தமிழச்சி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக, தமிழச்சி மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி, “சென்னை போலிஸ் என் மீது வழக்கு பதிவு. வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலிஸ் விசாரணைக்கு காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.