தி.மு.க. அழைப்பு: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஏற்பு!

தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழின் 75ஆம் ஆண்டு பவள விழா அடுத்த (ஆகஸ்டு) மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள வருமாறு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு தி.மு.க. அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ரஜினியும், கமலும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விழாவில், சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்க உள்ளார். பார்வையாளராக ரஜினி பங்கேற்கிறார்.

ரஜினி – கமல் அரசியலுக்கு வரப்போவதாக பேசப்பட்டுவரும் நிலையில் இருவரும் திமுக நடத்தும் விழாவில் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.