ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக 2 பேர் கைது!  

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பேஸ்புக்கில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக, அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் குமாரையும், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்கமால் அளித்த புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த மாடசாமி என்பவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.