காதலையும், கர்வத்தால் அழிந்துபோகும் மனிதத்தையும் சொல்லும் படம் ‘சீமத்துரை’

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்கும் படம் சீமத்துரை’. சந்தோஷ் தியாகராஜன் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

கதை நாயகனாக கீதனும், கதை நாயகியாக வர்ஷா பொல்லம்மாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன்  விஜி சந்திரசேகர், கயல்’  வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர  பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து இதன் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் கூறுகையில்,  “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்.

அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.

வாழ்வியலின் அங்கமான காதலையும்,  கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் ‘சீமத்துரை” என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின்

ஒளிப்பதிவு – திருஞான சம்பந்தம்

படத்தொகுப்பு – டி.வீர செந்தில்ராஜ்

கலை – என்.கே.ராகுல்

பாடல்கள் – அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன்

நடனம் – சந்தோஷ் முருகன்

இணை தயாரிப்பு – ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

ஊடகத் தொடர்பு – குமரேசன்