சினிமா பின்னணியில் உருவாகுகிறது ‘நான் அவளை சந்தித்தபோது’

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘நான் அவளை சந்தித்தபோது’

இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் மற்றும் இமான் அண்ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்தமூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், பரத் கல்யாண், சிங்கமுத்து, ரங்கா, சாந்தி வில்லியம்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எல்.ஜி.ரவிசந்தர். இவர் ‘மாசாணி’, பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் படபூஜையுடன் தொடங்கியது.

0a1j

‘நான் அவளை சந்தித்தபோது’ படம் பற்றி இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர் கூறுகையில், “1996ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியுள்ளோம். சினிமா  பின்னணியை கொண்ட இந்த திரைக்கதையில், அம்மா செண்டிமென்ட் மற்றும் காதல் கலந்து ‘நான் அவளை சந்தித்தபோது’ படமாக உருவாக்கப்பட உள்ளது. இன்று தொடங்கியுள்ள படப்பிடிப்பு தொடர்ந்து தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு  – ஆர்.எஸ்.செல்வா

இசை – ஹித்தேஷ் முருகவேல்

பாடல்கள் – அறிவுமதி, நா.முத்துக்குமார்

கலை – ஜெய்காந்த்

எடிட்டிங் – ராஜாமுகம்மது

நடனம் – சிவசங்கர்

ஸ்டண்ட் – ஹரி தினேஷ்

தயாரிப்பு  மேற்பார்வை – ஜி.சம்பத்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி