48,000 பாடல்கள் பாடிய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்தார்
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
மைசூரில் 88 வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.ஜானகி, 1957இல் ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், நான்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
தனது தனித்துவமான குரலால் இந்திய இசைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய எஸ்.ஜானகியின் மறைவு, இசையுலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
