“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி!”

கிட்டத்தட்ட இரண்டு கோடி தமிழர்கள் நேரடியா பலனடையும் வாய்ப்பு…

கிட்டத்தட்ட 24 வருட தமிழர்களின் சோத்துக்கான போராட்டம்…

4 நாட்களுக்குள் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய வாய்ப்பு…

மண்ணள்ளி போட்டுருக்காரு மோடி…!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதென உச்சநீதிமன்றத்தில் இன்று கூறியிருக்கிறது மோடியின் பாஜக அரசு.

தமிழ்நாட்டு மோடி பக்தர்கள் திங்கிற சோத்துலயும் காவிரி தமிழனின் வியர்வை இருக்கும். அவர்களும் திங்கிற சோத்துக்கு நேர்மையாக மோடியின் பாஜக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்…

காங்கிரஸ்காரன் மட்டும் சோத்துல உப்பு போட்டா திங்கிறான், என்னை மட்டும் கேக்குறன்னு எந்த ரோஷக்காரனும் கேட்க மாட்டான்…

மத்தபடி கர்நாடகா பொன்னியில டாடா சால்ட் போட்டு திங்கிற மேட்டுக்குடிகளை விட்டு த்தள்ளுங்க…

நம்ம சோத்துக்கான சண்டையை நாமே நடத்துவோம்…!

ANBE SELVA