ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ‘தங்கரதம்’!

என்டிசி மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் ‘தங்கரதம்’.

‘எனக்குள் ஒருவன்’, ‘ஸ்டாப்பெரி’ போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்த படத்தில்  நாயகனாக நடிக்கிறார். நீரஜா நாயகியாக  நடிக்கிறார். இவர்களுடன் சௌந்தர்ராஜா, நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா சாமிநாதன், பேபி தீபஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். டிஸ்கோ சாந்தியின் சகோதரி சுஜித்ரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலமுருகன். இவர் இயக்குனர் ஜெகனிடம் உதவி இய்யகுனராகவும், ‘ராமன் தேடிய சீதை’, ‘புதிய கீதை’ போன்ற படங்களில் இணை இயக்குனராகவும், ‘கோடம்பாக்கம்’ படத்தில் இணை இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர்.

‘தங்கரதம்’ படம் பற்றி இயக்குனர் பாலமுருகன் கூறுகையில், “ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறி ஏற்றிவரும் வேலை செய்யும் நாயகன் வெற்றிக்கும், அதே வேலை செய்யும் இன்னொரு கும்பலுக்கும் நடக்கும் தொழில் போட்டி எப்படி விபரீதமாக மாறுகிறது? அதில் என்ன நடந்தது? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

“ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் மார்க்கெட் இயங்கும் நேரத்தில் நடைபெற்றதில்லை. மார்க்கெட் செட் எதுவும் இல்லாமல், நிஜமாக மார்க்கெட் நடக்கும் நேரத்தில் படப்பிடிப்பை 15  நாட்களுக்கு மேல் நடத்தினோம். ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பின்னணியில் உருவாகும் முதல் படம் இது.

“காதல், ஆக்ஷன், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது ‘தங்கரதம்’.இந்த படத்தில்  மொட்ட  ராஜேந்திரன் தனி பாடலில்  நடனமாடி கலக்கி இருக்கிறார். படப்பிடிப்பு ஒட்டன்சத்திரம், நாகர்கோவில், பழனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு – ஜேக்கப் ரத்தினராஜ்

இசை – டோனி பிரிட்டோ

பாடல்கள் – யுகபாரதி, பாலமுருகன்.

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – என்.கே.பாலமுருகன்

ஸ்டண்ட் – ஃபயர் கார்த்திக்

நடனம் – தீனா

ஊடகத் தொடர்பு – யுவராஜ்