“மோடி அரசை விமர்சித்தால் உங்கள் வாய் மேல் செலோ டேப் ஒட்டப்படும்!”

மோடி அரசை விமர்சிப்பவரா நீங்கள்…?

உங்கள் விமர்சனத்தின் உக்கிரத்தைப் பொறுத்து, எத்தனை நாள் நீங்கள் உங்கள் வாய் மூலம் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை அரசு தீர்மானித்து, உங்கள் வாயை உங்கள் இச்சைப்படி திறக்க முடியாதபடி உங்கள்  வாய் மேலேயே செலோ டேப்பை அரசு ஒட்டிவிட்டு சீல் வைத்துவிட்டுப் போய்விடும்.

இரண்டாவது முறையும் விமர்சித்தால், செல்லோ டேப்பின் அகலத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி, உங்கள் மூக்கின் இரண்டு துவாரங்களையும் அடைத்து விடும்படியாக வாயோடு மூக்கையும் சேர்த்து செலோடேப் ஒட்டி விடப்படும்..

“ராஜதுரோக”த்தை இதைவிட “அகிம்சாமுறை”யில் தண்டிக்க வேறு அற்புதமான ஐடியா இருந்தால் அதை அரசுக்குத் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுமாம்.

கத்தியின்றி ரத்தமின்றி வழங்கப்படும் இந்த தண்டனையை ‘கருத்துச் சுதந்திரப் பறிப்பு’ என்று யாராவது பல் மேல் நாக்கைப் போட்டு பேசினால், அவர்களுக்கு வாய் துவாரமும் நாசி துவாரங்களும் ஒரு மாதம் தொடர்ந்து அடைக்கப்படுமாம்.

 இன்னொரு டிவியையும் ஒருநாள் ஒளிபரப்பை நிறுத்தும்படி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

 Gnanabharathi Chinnasamy