நடிகர் சங்கத்துக்கு லைக்கா அதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

கமல்ஹாசன் நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை சென்னை தி.நகரிலுள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கமல்ஹாசன், இளையராஜா, லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன் மற்றும் கருணாமூர்த்தி, ராஜு மகாலிங்கம், இவர்களுடன்  நடிகர்கள் பிரபு, சிவகுமார், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளார் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கமல்ஹாசன் படத்தின் தலைப்பை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தார்.

லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.

நடிகர் சங்க  பொதுச்செயலாளர் விஷால், லைக்கா அதிபர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.