திருடர்களிடமிருந்து குழந்தையை மீட்கும் போலீஸ் அதிகாரி –தன்ஷிகா!  

கேலக்ஸி  பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காத்தாடி’ இந்த படத்தில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் சித்திமகனும், பிரபல நடிகை மகேஸ்வரியின் சகோதரரும் ஆவார்.

கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர், வினோதினி, மதுமிதா, சூப்பர்குட் சுப்பிரமணி, சேரன்ராஜ். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பேபி சாதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.கல்யாண். இவர் சமீபத்தில் திரைக்கு வந்த ‘கத சொல்ல போறோம்’ படத்தை இயக்கியவர்.

‘காத்தாடி’ படம் பற்றி இயக்குனர் கல்யாண் கூறுகையில், “முழுக்க முழுக்க ஆக்ஷன், காமெடி – இரண்டும் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை  காமெடி கலாட்டாவாக இருக்கும்.

“தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை திருடர்களான அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் – இருவரும் பணத்திற்காக கடத்துகிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் தன்ஷிகா இந்த திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம்.

எனது ‘கத சொல்ல போறோம்’ படம் வெற்றி பெற்றதற்கு காரணமே அதில் உள்ள செண்டிமெண்ட் காட்சிகள் தான். அது இந்த படத்திலும் இருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக வெற்றியடையும்.

“கத சொல்ல போறோம்’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த படத்தை பார்த்த லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமாரும், ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமாரும்  இந்த படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள்.

“ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது” என்றார்.

ஒளிப்பதிவு – ஜெமின் ஜோம்அயாநாத்

பாடல் இசை – பவன்

பின்னணி இசை – தீபன்

பாடல்கள் – மோகன்ராஜன்

ஸ்டன்ட்  – அன்பறிவ்

கலை – ஜெய்

தயாரிப்பு மேற்பார்வை – அரவிந்த்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி