நடிகை கரீனா கபூரின் குழந்தை மரணிக்க சபிக்கும் இந்துத்துவ காட்டுமிராண்டிகள்!

15ஆம் நூற்றாண்டில் இந்தியா மீது படை எடுத்து வந்து, வாளை உறையில் இருந்து உருவி எதிர்த்துப் போரிட ஆளில்லாமல், மாளாத செல்வங்களை கொள்ளை அடித்துக் கொண்டு போன. #தைமூரின் வீரசாகசப் படை எடுப்பை உலக வரலாறு பிரமிப்போடு பார்த்தது.

ஏனெனில் #தைமூரை மக்கள் #தைமூர்லாங்க் என்ற பெயரால் தான் அழைத்தார்கள்.#லாங்க் என்ற சொல்லுக்கு கால் ஊனமானவர் என்று அர்த்தம்.பிறவியிலேயே ஏற்பட்ட கால் ஊனத்தினால் தைமூர் லாங்க் நடப்பதைத் தவிர்த்துவிட்டு, சிறுவயது முதலே குதிரை மேலேயே சவாரி செய்து வாழப் பழகிய மனிதன்.அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு குதிரைகளை தனது கட்டளைப்படி நடக்கப் பழக்கி, உலகத்தில் எந்தப் படையினாலும் வெல்ல முடியாத குதிரைப்படையை உருவாக்குவதில் வெற்றி கண்ட பிரம்மாண்டமான. தளகர்த்தன்.

மாற்றுத் திறனாளிகள் யாரையேனும் தங்கள் ரோல் மாடலாகக் கருத வேண்டும் என்றால் அது #தைமூர்லாங்கைத் தான்.

## #தைமூர்லாங்க் தான், இந்தியா மீது படை எடுத்து அதன் செல்வங்களை எல்லாம், கேட்க நாதியில்லாமல் கொள்ளை அடித்துப் போக முடியும் என்பதை செங்கிஸ்கானுக்கும் கஜனிமுகமதுவிற்கும் நாதிர்ஷாவிற்கும் உணர்த்திய முன்னோடி.

#தைமூர்லாங்கின் படை வருகிறது என்று கேள்விப்பட்டாலே எதிரிகளின் ரத்தம் உறைந்து போகும். அதைவிடக் கேவலமாக அவர்களுடைய வாள் கூட உறையை விட்டு வெளியே வர மறுத்துவிடும்.

இப்போது ஏன்#தைமூர்லாங்கின் கதை என்ற உங்கள் கேள்வி எனக்கு நன்றாகவே கேட்கிறது.

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரத் தம்பதிகளுக்கு (கரினாகபூர் & ஷைப் அலிகான்..)…அண்மையில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தைக்கு அவர்கள் #தைமூர் என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

அவ்வளவு தான்… நூற்றுக்கணக்கான பாஜக ஆட்கள் டுவிட்டரில், இந்தியா மீது படை எடுத்து வந்த இந்துக்களின் எதிரியான #தைமூரின் பெயர் சூட்டப்பட்ட அந்த ஆண்குழந்தை விரைவில் இறந்து போக வேண்டும் என்று வேண்டி தொடர்ந்து பதிவுகள் போட்ட வண்ணமுள்ளனர்.

ஒரு குழந்தை சாக வேண்டும் என்று வெளிப்படையாகவே வேண்டும் இந்த மிருகங்களிடம் ஏதாவது ஒரு மனித மாண்பை எதிர்பார்க்க முடியுமா?

முதலில் லவ்ஜிகாத் எதிர்ப்பு என்ற பெயரில் நம் #கட்டில் துணை யாராக இருக்க வேண்டும் என்றார்கள். மாட்டிறைச்சியை சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை விதித்து நம் #தட்டில் கை வைத்தார்கள். இப்போது நம் குழந்தைக்கு நாம் என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நம் ##தொட்டில் குழந்தையை சாகும்படி வேண்டுகிறார்கள்….

நம் வாழ்வை நம் பிரியப்படி வாழ இந்த சனியன்கள் ஒருநாளும் அனுமதிக்காது.

GNANABHARATHI CHINNASAMY