விஜய்யின் ‘பைரவா’ படப்பிடிப்பு பூசணிக்காய் உடைப்புடன் நிறைவடைந்தது!

‘எங்க வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’, ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த  பாரம்பரிய நிறுவனமான – நாகி ரெட்டியின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க – விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில்,  பரதனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு, நேற்று (செவ்வாய்கிழமை) பூசணிக்காய் உடைப்புடன் நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் விஜய், தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், எடிட்டர்  பிரவீன், கலை இயக்குனர் பிரபாகரன், தலைமை  நிர்வாகி ரவிச்சந்திரன், முதன்மை  நிர்வாகி  குமரன்  மற்றும் படகுழுவினர், ‘பைரவா’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும்   வெளியிடும்  ஸ்ரீகிரீன் புரொடக்க்ஷன்ஸ்  சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .

கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில்,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதா  ஸ்வா, சதிஷ், அபர்னா  வினோத், சிஜு ரோசலின், பாப்ரி கோஷ்,  மைம் கோபி, ஸ்ரீமன் ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல்முறையாக   இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய் படத்திற்கு  இசை  அமைத்துள்ளார்.  அனைத்துப்  பாடல்களையும் வைரமுத்து  எழுதி இருக்கிறார்.

‘பைரவா’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள்  விரைவில் வெளிவரவுள்ளது.

ஸ்டண்ட் – அனல்அரசு

நடனம் – தினேஷ்

புரொடக்சன்  கண்ட்ரோலர் – தாண்டவ கிருஷ்ணன், உதய குமார்

ஊடகத் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது.