மொத்த மதுரையையும் ஒத்த தார்ப்பாய்ல மூட விஞ்ஞானி செல்லூர் ராஜூ மாஸ்டர் பிளான்!

“தம்பி, ஒத்தக்கடை மலை உச்சில மொத ஆணிய எறக்கி தார்ப்பாய்ல ஒரு முடிச்சப் போடறோம். அப்பிடியே கூடல் நகர் ரேடியோ டவர் உச்சில ரெண்டாவது முடிச்சு, நாகமலை மேல மூணாவது முடிச்சு, திருப்பரங்குன்றம் மலை உச்சில நாலாவது முடிச்சப் போடறோம், ஒரே ஒரு ஒத்தத் தார்ப்பாய்ல….”

“நடுவுல வெய்ட் தாங்காம தார்ப்பாய் கீழ எறங்கீரும்லண்ணே…?”

“தம்பி, அதுக்குத் தான் கோரிப்பாளையம் தேவர் சிலைகிட்ட இருக்கே ஒரு ஒசரமான லைட் கம்பம். நடுவுல முட்டுக் குடுக்கறதுக்கு அத யூஸ் பண்ணிக்குவோம்ப்பா. அப்படியே செல்லூரும் மிடில்ல வந்துரும் பாரு…”

“சூப்பர்ண்ணே…”

“அப்படியே மொத்த மதுரையையும் சர்க்கஸ் கூடாரம் மாதிரி ஒத்தத் தார்ப்பாய்ல மூடறோம் தம்பி. அக்னி நட்சத்திரம் முடியற வரைக்கும் ஒரு பொட்டு வெயில் ஊருக்குள்ள விழாமக் காப்பாத்தறோம். என்ன ஒரு அம்பது கோடி பட்ஜெட் போட்டுக்குவமா? தார்ப்பாய்க்கு மட்டும். கட்டுக்கூலி தனி. எவன் நம்மகிட்ட செலவு கணக்கு கேட்கப் போறான் சொல்லு…”

“அட்டகாசம்ண்ணே… மக்கள் ஏற்கனவே மகிழ்ச்சியா இருக்காங்கண்ணே… இனிமே ரொம்ப மகிழ்ச்சி ஆயிருவாய்ங்கண்ணே. அடுத்த எலக்சன்லையும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சிதாண்ணே… நீங்க வேற லெவல்ண்ணே. அதெல்லாம் இந்த மக்களுக்கு இப்ப புரியாதுண்ணே.”

“இங்கு சிறந்த முறையில்
ஓசோன் ஓட்டைக்கு மேல்
தெர்மோக்கோல் ஷீட்
போடப்படும்!
அணுகவும் – செல்லூர் ராஜு, மதுரை.”

இப்படிக்கு
செல்லூர் ராஜூ பாறைகள்!

(வாட்ஸ்ஆப்பில் வந்த பதிவு)