“மின்கம்பியை கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா?”: கூகுள் பதில்! 

VIJAYASANKAR RAMACHANDRAN: மின்கம்பியைக் கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா என்று googleஇல் தேடிப் பார்த்தேன்.

நான் பார்த்தவரை மூன்று சம்பவங்கள் தான் இருக்கின்றன.

இதில் இறப்பு எண்ணிக்கை மூன்று.

1.அணில்

2. போலீசாரின் மோப்ப நாய்

3. ராம்குமார்

SORNAKUMAR R: ஜட்ஜ்: எப்படி செத்தான்?

போலீஸ்: நான் அந்த ஒயர்ல கரண்ட் இருக்குனு சொன்னேன். இன்னொரு போலிஸ் கரண்ட் இல்லனு சொன்னாரு. ராம்குமார கூப்பிட்டு டெஸ்ட் பண்ணிட்டோம்.

G PITCHU MANI: ஜெயலலிதா அம்மையார், தண்டனை பெற்றே சிறையில் இருந்தாங்க.

முதல் நாள் முதல்வரா இருந்தவங்க, மறுநாள் களவாணி கைதியா ஆயிட்டாங்க.

அவங்களே மனசு உடைஞ்சு கரண்டு கம்பிய கடிக்கல.

குற்றம் மட்டுமே சாட்டப்பட்ட ராம்குமார் ஏங்க கரண்டு கம்பிய கடிக்க போறான்?

PRABHAKARAN PK: பிளேடால் கழுத்தறுக்கப்பட்டு, மின்சாரத்தால் பொசுக்கப்பட்டிருப்பது இந்திய சட்டமும்-.நீதியும் தான்..