“அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் தர மாட்டோம்!” – பியூஷ் கோயல்

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் மின்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தபின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பியூஷ் கோயல், ”கூடங்குளம் 3, 4 உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தமிழகத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

அதே சமயம் அணு உலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்க வாய்ப்பில்லை. தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகள் மட்டும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.