“துரோகிகளை துவம்சம் பண்ணுங்கள்”: பொதுக்குழுவில் “கைப்பிள்ளை” வடிவேலு ஆவேசம்!

ஊழல் குற்றச்சாட்டுகளாலும், பழி தீர்க்கும் வன்மத்தாலும் நாறிக் கிடக்கும் “தென்னிந்திய” நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்பொதுக்குழுவில் கலந்துகொண்டு வடிவேலு பேசியதாவது:

சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர் – நடிகைகள் எல்லாம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த (விஷால்) அணி நல்லது தானே செய்கிறார்கள், அதை கெடுப்பதற்கு பலர் அலைகிறார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டியே தீருவோம் என்று இவர்கள் சொல்கிறார்கள், அதை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது. இ

டையே தற்போது இன்னொரு இடத்தை காணோம் என்கிறார்கள். இந்த அணிக்கு வேலைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை கண்டுபிடிக்க கிளம்ப வேண்டியதிருக்கிறது.

விஷால், கார்த்தி, நாசர் அண்ணன், கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட இந்த அணியினர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் வரை நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் எல்லாம் வாழ்த்துங்க, இளைஞர்கள் எல்லாம் கைகொடுங்க, எதிரிகளை எல்லாம் உதறிவிடுங்க, துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்க.

இவ்வாறு வடிவேலு பேசினார்.