“விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான்!” – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஹைட்ரோ கார்பன் எனும் பெயரில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த 15-ம் தேதி இந்திய ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. விளைநிலங்களை அழிக்கும் இந்த நாசகார திட்டத்தை கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டைப் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்பிரச்சனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் தான். ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தப்பட வேண்டும். நெடுவாசல் காப்பாற்றப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.