”பகிர்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை!” – ஹன்சிகா

தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி, இன்று தனது பிறந்த நாளை, விமர்சையாக இல்லாமல், எளிமையாக தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார்.

காலையில் தன் தாயார்  ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தெடுத்து  வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்த நாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிர உள்ளார்.

”பகிர்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும், பழக்கத்தையும் எனது தாயார்  எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிசுளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும்.

”சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்த நாள் முதல் தீர்மானமாக  பின்பற்ற உள்ளேன்” என்கிறார் ஹன்சிகா.