சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி: காவி பொறுக்கிகள் இருவர் கைது!

டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்துக்குள் ஊடுருவிய காவி பொறுக்கிகள் 2 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீதாராம் யெச்சூரி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2 இளைஞர்கள் திடீரென்று அவரை தாக்க முயன்றனர். இச்சம்பவத்தில் யெச்சூரிக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

தாக்குதலில் ஈடுபட முயன்ற இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் ‘ஹிந்து சேனா’ என்ற காவி பொறுக்கி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.