எல்லோருக்கும் அவசியமாகிப்போன பணம் பற்றிய ஒரு பயணம் ‘ரூபாய்’! 

காட் பிக்சர்ஸ் பிரபு சாலமன் தயாரிப்பில், ஆர்.பி.கே எண்டர்டெய்ன்மெண்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’. இந்த படத்தை E 5, ஜே.கே குரூப்ஸ் டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், காஸ்மோ வில்லேஜ்  சிவகுமார் இருவரும் இணைந்து உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள். இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்   எம்.அன்பழகன். இவர் இதற்குமுன் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற ‘சாட்டை’ படத்தை இயக்கியவர். இவர் கூறுகையில், “சாட்டை’ படம் எனது முதல் படம். அதுபோல் இந்த ‘ரூபாய்’ படமும் முதல் படம் தான். ஏனென்றால், அது வேறு கதை களம், இது வேறு கதை களம்.

பணத்தாசை தான் எல்லா தீமைகளுக்கும் ஆணிவேர். தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி – பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும்  ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே  ஒரு லாரி மட்டும் தான். அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக சென்னை கோயம்பேடு மார்கெட் வருகிறார்கள். ஊர் திரும்பும்போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்குப் போனார்களா, இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை! நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும்  இல்லை! இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் அவசியமாகிப்போன பணம் பற்றிய ஒரு பயணம் தான் இந்த ‘ரூபாய்’.

இதை காமெடி, காதல் கலந்து உருவாக்கி உள்ளோம். படப்பிடிப்பு சென்னை,  மூணார், மறையூர், தேனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார் இயக்குனர் எம்.அன்பழகன்.

ஒளிப்பதிவு    –  வி.இளையராஜா

இசை   –  டி.இமான்

 பாடல்கள்   –  யுகபாரதி

எடிட்டிங்  – ஆர்.நிர்மல்

 கலை   –  ஏ.பழனிவேல்

 நடனம்   –  நோபல்

ஸ்டண்ட்  –  மிராக்கிள் மைக்கேல்

நிர்வாக தயாரிப்பு – ஜே.பிரபாகர்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி