“இயல்பான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்!” – ராஜ்கமல் 

ராஜ்கமல் நாயகனாக நடித்திருக்கும் ‘மேல்நாட்டு மருமகன்’ திரைப்படம் இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி ராஜ்கமல் கூறுகையில், “இயக்குனர் கே.பாலசந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டு  ‘சஹானா’ என்னும் அவரது தொடரில் அறிமுகமானேன். தொடர்ந்து அவரது டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்.

0a1d

தொடர்களில் தொடர்ந்து நடித்தால் சினிமாவில் கால் பதிக்க முடியாது என்ற பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரையை ஏற்று, தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்.

குணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம், இயக்குனர் எம்.எஸ்.எஸ்-க்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் ‘மேல்நாட்டு மருமகன்’ திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்.

ஆனால், பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளைச் சந்தித்த ‘மேல்நாட்டு மருமகன்’, திரைக்கு வருவதில் தாமதமானது. அந்த இடைவேளையில் ‘மேல்நாட்டு மருமகன்’ படத்தின் போட்டோஸ் பார்த்து ‘சண்டிக்குதிரை’ என்ற படத்திலும் எனக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்தப் படம் வெளியாகி, சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது.

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வரும் (பிப்ரவரி) 16ஆம் தேதி ‘மேல்நாட்டு மருமகன்’ படம் திரைக்கு வருகிறது. இன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது” என்றார்.