“என் ஆதரவு யாருக்கும் இல்லை”: பாஜக.வின் புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்தார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “எங்கள் வேட்பாளர் கங்கை அமரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்” என்று கூறினார். தமிழிசையின் இந்த அறிவிப்பு, பாஜக.வை விரும்பாத ரஜினி ரசிகர்கள் பலருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் “வரும் தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், தமிழக மக்களை, குறிப்பாக ஆர்.கே.நகர் வாக்காளர்களை ஏமாற்ற பாஜக. கிளப்பிவிட்ட புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.