ஒரு கனவு போல – விமர்சனம்

நாயகன் ராமகிருஷ்ணனும் – சவுந்தர ராஜாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். தாய், தந்தையை இழந்த சவுந்தரராஜா படிப்பை முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலைக்காக காத்திருக்கிறார். லாரி ஓட்டுநராக வரும் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே சவுந்தரராஜா வளர்ந்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அன்போடு ஒருவரையொருவர் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமகிருஷ்ணனுக்கு நாயகி அமலா ரோஸை பெண் பார்க்க செல்கின்றனர். மாப்பிள்ளை லாரி ஓட்டுநர் என்பதால் ராமகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுக்க பெண் வீட்டார் மறுக்கின்றனர். ராமகிருஷ்ணனுக்கு பெண் பிடித்திருந்தால், அமலா ரோஸை சந்தித்து பேசும் சவுந்தர ராஜா இருவருக்கும் இடையேயான நட்பின் புனிதம் குறித்து கூற, அமலா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

இதையடுத்து ராமகிருஷ்ணனுக்கும், அமலாவுக்கும் திருமணமும் நடந்துவிடுகிறது. திருமணத்திற்கு பின்னர் தனியாக குடியேறும் ராமகிருஷ்ணன் தனது நண்பனை தனது வீட்டிலேயே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ராமகிருஷ்ணனின் வற்புறுத்தலால் சவுந்தர ராஜா பெரும்பாலும் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு வருகிறார்.

ஒருநாள் வீட்டிற்கு உணவருந்த வந்த சவுந்தர் ராஜா மழை காரணமாக வெளியே செல்லமுடியாமல் ராமகிருஷ்ணன் வீட்டிலேயே தங்குகிறார். ராமகிருஷ்ணனுக்கு வேலையின் பளு காரணமாக வீட்டிற்கு வர தாமதமாகிறது. மழையால் ஏற்பட்ட ஒருவித உணர்ச்சியால் அமலாவை தொடுகிறார் சவுந்தரராஜா. தொட்டவுடன் அமலா பதறிக் கொண்டு எழுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் சவுந்தரராஜா அங்கிருந்து சென்றுவிடுகிறார். மேலும் தனது நண்பனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதை நினைத்து வருத்தம் கொண்டு மனம் நொந்து போகிறார்.