செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை: பேய் கதாபாத்திரத்தில் ரெஜினா!

செல்வராகவன் இயக்கி வரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரெஜினா.

‘கான்’ படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை தொடங்கினார் இயக்குனர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வந்தார்கள்.

ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் முதல் பேய் படம் இது.

மேலும், இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருப்பதாகவும், தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பேய் படங்களை ஒப்பிடும்போது, இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தை கெளதம் மேனன், மதன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.