“நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்” நூல் வெளியீடு!

பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை ‘நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா வெளியிட, கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.