தேர்தல் பிரசார பயணம்: கமல்ஹாசன் ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தனித்து சந்திக்கிறது. இது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணி குழுவுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வெற்றி வியூகங்கள் தொடர்பாகவும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

துணைத்தலைவர் மவுரியா, நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.