மலைவாழ் மக்களின் வாழ்வியலை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து சொல்லும் ‘எவனும் புத்தனில்லை’!

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எவனும் புத்தனில்லை’. இந்த படத்தில் நபி நந்தி, சரத் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா, கௌரவ வேடங்களில் பூனம் கவுர், சினேகன் நடிக்கிறார்கள்.. இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, சிங்கமுத்து, முருஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார் சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ராஜா சி.சேகர்

இசை – மரியா மனோகர்

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

பாடல்கள் – சினேகன்

வசனம் – எஸ்.டி.சுரேஷ்குமார்

ஸ்டண்ட் – அன்பு அறிவு,  மிராக்கில் மைக்கேல்

நடனம் – அசோக்ராஜா சங்கர்

கலை –ஏ.பழனிவேல்

இணை தயாரிப்பு – கே.டி.எஸ்.பாஸ்கர், கே.சுப்ரமணியன், ஜோசப் ஜெய்சிங், எம்.கார்த்திகேயன், வி.சி.சூரியன்

கதை, திரைக்கதை, இயக்கம் – எஸ்.விஜயசேகரன்

இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.விஜயசேகரன் கூறுகையில், “இது ஜனரஞ்சகமான படம். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. ஆக்‌ஷன், திரில்லர் கலந்து மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டது.  விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.