திமுக எம்.பி – அதிமுக பெண் எம்.பி. படங்கள்: அசலும் போலியும்!

கடந்த ஆண்டு ஒரு மனைவியின் பிரிவு எத்தனை துயரமானது என்பதை வெளிப்படுத்தியிருந்தவர் திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா.. அவர் எழுதிய “மனைவிக்கு நேரம் ஒதுக்குங்கள்” என்ற கட்டுரை பலரையும் உலுக்கியிருந்தது.

திமுகவில் திராவிடர் இயக்க கொள்கைகளை ஆழ்ந்து படித்தவர்களில் ஒருவராக, அறிவுஜீவியாகத் திகழும் திருச்சி சிவாவும், அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பாவும் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பி வருகின்றன.

உண்மையில் இந்த புகைப்படங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை. சசிகலா புஷபா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களில், கணவரின் முகம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் திருச்சி சிவாவின் முகம் ஒட்டப்பட்டு, மாஃபிங் முறையில் போலியாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

(மேலே இடதுபுறம் இருப்பது அசல் புகைப்படம்; வலதுபுறம் இருப்பது போலி.)

இந்த கிரிமினல் வேலையைச் செய்தவர் தூத்துக்குடி ஆனந்தராஜ் என்று கூறப்படுகிறது.

அவர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பாரா?

இந்த கேவலமான கலாச்சாரம் முடிவுக்கு வருமா?