மோடியின் நோட்டு நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்கும்: பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!

ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்..

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

ரூபாய் நோட்டு விவகாரம் கருப்பு பணத்தை ஒழிக்கவும், ஊழலை எதிர்க்கவும் பயன்பட்டாலும், இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும்.

ரூபாய் நோட்டு விவகாரம் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற அளவில் வரவேற்கிறேன்.

இந்த தருணத்தில் ஏழை மக்களின் துயரநிலையை போக்க நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.