சந்தானம், யோகிபாபு இணைந்து கலக்கும் முழுமையான காமெடி படம் ‘டகால்டி’: ஹைலைட்ஸ்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்ட சந்தானம் நாயகனாக நடித்துள்ள முழுமையான காமெடி படமான ‘டகால்டி’ நாளை (ஜனவரி 31ஆம் தேதி) உலகெங்கும் திரைக்கு வருகிறது.

சமீப நாட்களாக காமெடியில் அனைவரது கவனத்தையும் கவர்ந்துவரும் யோகிபாபு இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து கலக்கியிருக்கிறார்.

இவர்களுடன் வங்காள திரையுலகின் முன்னணி நடிகை ரித்திகாசென், தெலுங்கு திரையுலகின் பிரம்மானந்தம், ஹிந்தி திரையுலகின் தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணன், ஸ்டண்ட் சில்வா என தமிழ், தெலுங்கு, வங்காளம், ஹிந்தி என நான்கு மொழிகளின் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பிரபல பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த், இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார்.

திருப்பூரை சேர்ந்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி, தனது  18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து படக்குழு தெரிவித்த முக்கிய தகவல்கள்:-

#இது ஆக்‌ஷன் கலந்த காமெடிப் படம். சண்டைக் காட்சிகள் கூட ஜாக்கிசான் பட சண்டைக் காட்சிகள் போல சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் இருக்கும்.

#இது டிராவலை அடிப்படையாகக் கொண்ட கதை.

#சந்தானத்துக்கு இது புது களமாக இருக்கும். இதற்கு முன் அவர் பண்ணிய படங்களில், அவரைச் சுற்றி உள்ள நிறைய கதாபாத்திரங்கள் வழியாகத்தான் கதை அமைந்திருக்கும். இதில் அவரை மட்டுமே மையமாகக் கொண்டு தான் கதை பின்னப்பட்டிருக்கும்.

#சந்தானம் பாணியிலான படமாகவும் இருக்கும். அவர் பாணியிலிருந்து வேறுபட்ட படமாகவும் இருக்கும்.

0a1b

#படத்தில் மும்பையில் வசிக்கும் தமிழராக வருகிறார் சந்தானம். அவரது கேரக்டர் பெயர் குரு.

#சந்தானத்தின் தொழில் பக்தி எவரையும் வியக்க வைக்கும். கதைக்காக தன்னை மிகவும் அர்ப்பணித்துக் கொள்வார். இயக்குநர் சொல்வதை மட்டுமே செய்வார். ஹீரோ பில்டப்புக்கு என்று எதையும் திணிக்க சொல்லமாட்டார். அதேபோல் அவருடைய ஆலோசனையும் இயக்குநர் ஏற்றுக்கொள்கிற மாதிரி இருக்கும். பழகு வதில் டவுன் டூ எர்த்.

#நடிப்பைப் பொறுத்தவரை காமெடி பண்ணுவதுதான் கஷ்டம். அதையே அவர் சரியாக பண்ணுவதால் மற்றவற்றை எளிதாகப் பண்ணுகிறார். இதில் சண்டைக் காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். ஆக்‌ஷன், காமெடி என்று எல்லாமே கதைக்குள் இருக்கும். குடும்பமாக தியேட்டருக்கு வருபவர்களை அதிகமாக இந்தப் படம் எண்டர்டெயின் பண்ணுவது நிச்சயம்.

#இப்படத்தின் நாயகி அழகாக இருப்பதாக நெறைய பேர் பாராட்டுகிறார்கள். நாயகி என்றாலே அழகாகத் தானே இருக்க வேண்டும்? ரித்திகாசென் வங்காளத்தில் இருந்து மெரீனா கடற்கரைக்கு வந்திருக்கிறார். பிரமாதமாக பெர்ஃபார்ம் பண்ணியிருக்கிறார். தமிழில் இது தான் முதல் படம். நிறைய வங்காளப் படங்கள் பண்ணியிருக்கிறார்.

#யோகிபாபு ஃப்ரெண்ட் கேரக்டர் பண்ணியிருக்கிறார். சந்தானம், யோகி பாபு காம்பினேஷன் பிரமாதமாக வந்துள்ளது.

#டிராவல் கதை என்பதால் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான் என்று ஏராளமான மாநிலங்களில் படம் எடுத்துள்ளோம்.

#பின்னணிப் பாடகர் விஜய் நாராயணன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அங்கிருந்துதான் எங்களுக்கு டியூன் வந்தது. கதைக்கு தேவையான பாடல்களை கார்க்கி கொடுத்துள்ளார்.

#தீபக்குமார் பதி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘தில்லுக்கு துட்டு’, ‘பீட்சா-2’ உட்பட ஏராளமான படங்களில் வேலை பார்த்துள்ளார்.

#படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.