‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை கோரி வழக்கு!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்க எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தை இம்மாதம் (நவம்பர்) 11ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தர வேண்டும் என்றும், அவர் தலைமறைவாக உள்ளதால் அவருடைய பங்குதாரர் டி.சிவா பெயரில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும், இந்த படத்தை வெளியிட்டு விட்டால் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது எனவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதனின் பங்குதாரரான டி.சிவாவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.