பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார் ஜெயலலிதா!

இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளியாகிவிட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட 232 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும், திமுக கூட்டணி 98 தொகுதிகளையும் (திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1) கைப்பற்றியுள்ளன.

இதனால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைகிறது. 6-வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. இதனையொட்டி ஜெயலலிதா நாளை பிற்பகல் 2 மணியளவில், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஸ்பென்சர் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார்.