“தி.மு.க.வுடன் கூட்டணி என்பது வதந்தியே”: விஜயகாந்த் பேச்சு!

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துவிட்டது என்றும், அக்கட்சிக்கு 59 தொகுதிகள் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாயின. இச்செய்தியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், ரூ.1.77 கோடி மதிப்பிலான பணிகளை தொடக்கி வைத்து பேசிய விஜயகாந்த், “தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியாகும். கூட்டணி முடிவானால் அது குறித்து பகிரங்கமாகவே அறிவிப்பேன். கூட்டணிக்காக எவ்வித பேரத்திலும் ஈடுபடவில்லை. நான் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்படவில்லை. அந்த இரண்டையும் நான் ஏற்கெனவே சம்பாதித்துவிட்டேன்” என்றார்