விதார்த் நடிக்கும் ‘வண்டி’ படத்தை விநியோகிக் கிறது எஸ் ஃபோக்கஸ்

விதார்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘வண்டி’. ரூபி பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார். புதிய இயக்குநர் ரஜீஸ் பாலா இயக்குகிறார்.

இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையைப் பெற்று இருப்பவர் எஸ் ஃபோக்கஸ் நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல வினியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எம்.சரவணன்.

‘சென்னை 28 பாகம் 2’, ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட பல படங்களை வினியோகித்த இவருடைய தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் -பார்த்திபன் நடிப்பில் உருவான ‘குப்பத்து ராஜா’ வெகு விரைவில் வெளிவர உள்ளது.

“என் நிறுவனத்தின் பிரதான நோக்கமே தரமான படங்களைத்   தொடர்ந்து வெளியிடுவது தான். ‘வண்டி’ படத்தின் விநியோக உரிமையைப் பெற்று , படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளேன். ஒரு தரமான படத்துக்கு உற்ற துணையாக புரொமோஷன்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் அமைந்து விட்டால் அந்த படத்தின் வெற்றிக்கு யாரும் தடை விதிக்க முடியாது. அந்த வகையில் சிறந்த கதையமைப்பு, காட்சியமைப்பு,  எங்களது நிறுவனத்தின் விளம்பரம் ஆகிய அனைத்தையும் கொண்ட ‘வண்டி’ வெற்றிப் பாதையில் பயணிக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்கிறார் எம்.சரவணன்.