ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்!

ஜிஎஸ்டி வரியை தவிர்க்க சில வழிமுறைகள்:

பெருசா ஒண்ணுமில்லைங்க…! நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்…!

1. வெளியில் செல்லும்போது பாட்டிலில் குடிதண்ணீர் எடுத்து செல்லவும்.

2. பயணத்தின்போது புளி சாதம், லெமன் சாதம், வசதி இருந்தால் வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும். (டப்பால கட்டுங்க! கவர்ல கட்டினா ஜிஎஸ்டி வரும்!)

3. அண்ணாச்சி கடைக்கே போங்க. வயர்கூடை, இல்லேன்னா மஞ்சப்பை எடுத்திட்டுப் போய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமானோ வாங்குங்க.

4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.

5. திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்க.

6. விடுமுறை நாட்களில் மால், ஷாப்பிங்னு போகாம, பாட்டி – தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம்.

7. காலைல நடைப்பயிற்சி சென்றுவிட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல், வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க.

9. பழைய காலத்து  பழக்கம் போல, நண்பர்கள் டூர் போனால ஏதாவது ஒரு நண்பர் வீட்டில் தங்குங்கள்.

10. சேவை வரியை தவிர்க்க, அடுத்தவரின் சேவையைத் தவிர்த்து சொந்தமாக வேலை செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படி செய்தால் –
உடல் ஆரோக்கியமாகும். மிகப் பெரும் பணம் மிச்சமாகும். சொந்தம் பெருகும். மனைவி – கணவன் பாசம், அம்மா – அப்பா – பிள்ளைகள் பாசம் பெருகும். நட்பு வட்டங்கள் உண்மையாகும்.

நட்புடன்

அமாவாச

(Shared from Naga Raja Cholan M.A.)