நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் திடீர் நீக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும் திடீரென தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக இவர்களை சங்கத்திலிருந்து தற்காலிமாக நீக்கியிருப்பதாக தெரிகிறது.