விஜயகாந்த் மகன் அணியில் மீண்டும் பி.வி.சிந்து!

விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உரிமையாளராக இருக்கும் ‘சென்னை  ஸ்மாஷர்ஸ் அணி’யின் கேப்டனாக  இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.விசிந்து கடந்த வருடம்  திகழ்ந்தார்.

அதுபோல் இந்த வருடமும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியில் பி.வி.சிந்து கலந்துகொள்கிறார் என்று அந்த அணியின் உரிமையாளர் விஜய பிரபாகரன் கூறினார்.

இது பற்றி அவர் கூறுகையில், “பி.வி.சிந்து மீண்டும் எங்கள் அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி. அவர் எங்கள் அணியில் இருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் பலம். மேலும், சென்னை ஸ்மாஷர்ஸ் அணியிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார் என்பது எங்களுக்கு பெருமை. இந்த முறை நிச்சயமாக எங்கள் அணி கோப்பையை வெல்லும்” என்றார்.