மெரினா: மாணவர்கள் போராட்டத்துக்கு நடிகை நயன்தாரா நேரில் ஆதரவு!

ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மெரினாவுக்கு வந்த விஜய், அங்கு போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். முகத்தில் துணி ஒன்றை கட்டிக்கொண்டு சுமார் 3 மணி நேரம் மாணவர்களோடு அமர்ந்திருந்தார்.

நடிகை நயன்தாராவும் சனிக்கிழமை மெரினா வந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். முகத்தை மறைக்காமல் சாதாரணமாக நயன்தாரா மாணவர்களோடு அமர்ந்திருந்தார்.

இந்த போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த ஒரே முன்னணி நடிகை நயன்தாராதான் என்பதும், அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.