ஜல்லிக்கட்டு சர்ச்சை: நடிகர் விஷால் மழுப்பல்!

ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதால் அது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் கருத்து தெரிவித்ததாக தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் ராஜேஷிடம் கேட்டபோது, “ஜல்லிக்கட்டு தடை தொடர்பான தனது கருத்துக்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவரது உருவ பொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தும் என்னிடம் இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இது பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்று தெரிவித்திருக்கிறார்.