“டிசம்பர் 4ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோவுக்கு இறுதி பிரியாவிடை”: கியூப அரசு

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கியூபாவில் காஸ்ட்ரோ மறைவையொட்டி 9 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கியூப அரசு தெரிவித்துள்ளது.

கியூப புரட்சியின் நாயகனும், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று அந்நாட்டு அதிபரும், பிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான ரவுல் காஸ்ட்ரோ முதலில் தெரிவித்திருந்தார். ஆனால், மாபெரும் தலைவருக்கு உலகத் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்த வசதியாக, அவரது இறுதிச் சடங்குகளை டிசம்பர் 4ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Read previous post:
modi-fidel
நரேந்திர மோடிக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இதுதான் வித்தியாசம்!

பெருசா ஒண்ணும் தெரியாது. ஒரு நாட்டோட லீடர், அவரு இறந்துட்டாரு. பிடல் காஸ்ட்ரோ, பேருகூட கவர்ச்சியா இருக்கும். எல்லாரும் அந்த செய்தியை பகிர்ந்துக்கிறாங்க. நானும் பகிர்ந்துக்கிறேன், அவ்ளோதான். தெரியல, செவ்வணக்கம்னு சேர்த்து

Close