தமிழரின் ’ஏறுதழுவுதல்’ வரலாற்றுக்கு மதச்சாயம் பூசும் அயோக்கிய பாஜக!

தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்துவரும் நிலையில், ஜல்லிக்கட்டு வரலாற்றுக்கு தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் இந்துக்களுடன் தொடர்புபடுத்தி அயோக்கியத்தனமான விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், “அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது.

இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை “இந்துக்கள்” பின்பற்றி வருகின்றனர்” என பதிவிடப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற தமிழரின் வீரவிளையாட்டை பார்ப்பனியம் இவ்விதம் “இந்துக்களின் விளையாட்டாக” திரித்து தன்வயப்படுத்த முயலுகிறது என்பது குறிப்பிட்த்தக்கது.

முன்னதாக, இன்று காலை குடியரசு துணைத் தலைவரும் தீவிர சங்கியுமான வெங்கய்ய நாயுடு தனது ட்விட்டரில் காவி உடையில் வள்ளுவர் படத்தைப் பகிர்ந்தது சர்ச்சையானது. சர்ச்சையைத் தொடர்ந்து அவர் அப்படத்தை நீக்கினார்.