10 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’

இயக்குனர் எம்.எஸ்.செல்வா. நேற்று (21.10.2016 அன்று) ஒரு உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து சாதனை புரிந்திருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்ஜெக்டான ஹாரர் காமெடி தான் படத்தின் களம். படத்தின் பெயர் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’.

ஒரு வீட்டுக்கு புதுமணத் தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை. எனவே, பேய் நம்பிக்கையை வரவழைத்து விரட்ட, சில நண்பர்களை அமர்த்துகிறான். இப்படி திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே, இன்னொரு புதுமண தம்பதிகள் தங்க இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களை மேலே தங்க வைக்கிறான் கணவன். இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள், தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை, உண்மையான பேய்கள் என்று தெரிய வருகிறது. அதன்பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியாக சொல்லும் படம் தான் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’.

0a1

மொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் என முழுமையான திட்டமிடலுடன் காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குனர்கள் சேர்ந்து எடுத்த ‘சுயவரம்’ படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப் பட்டியலில் நீடிக்கிறது. அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

டாக்டர். பி.சரவணன், அனு கிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், இயக்குனர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜெயக்குமார் தங்கவேலு

இசை – ராஜா

பாடல்கள் – இயக்குனர் எம்.எஸ்.செல்வா

நடனம் – மது

தயாரிப்பு – எம்.எஸ்.செல்வா, ஜி. அழகர்

ஊடகத் தொடர்பு – வீகே.சுந்தர்