ஜீ தமிழ் சினி அவார்ட்ஸ் 2020

2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ZEE தமிழ் தொலைக்காட்சி, சமீபத்தில் ’zee தமிழ் குடும்பம் விருதுகள்’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ’ZEE  தமிழ் சினி அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் இருந்து சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர். இதற்காக 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் .இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், பரத் பாலா, பரத்வாஜ் ரங்கன், கரு பழனியப்பன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .

இந்த திரைப்பட விருது வழங்கும் விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்வு குழுவினரை சுஜீ பிரபாகரன், தமிழ்தாசன் ஆகியோர் வரவேற்றனர். நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசியவர்களின் பேச்சு விவரம்:-

சுஜீ பிரபாகரன்:

zee தமிழ் துவங்கி 11 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. பல புது முயற்சிகளை செய்துள்ளோம். தற்போது உங்கள் அனைவரின் ஆதரவோடு ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் தேர்வுக் குழு நபர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்தாசன்: 

இந்த நாள் zee தமிழின் முக்கியமான நாள். இந்த விழாவை நடத்த சென்ற வருடம் முயற்சித்தோம். தற்போது தான் இதை நடத்த முடிந்தது. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சிக்கும் இடையே ஒரு பெரிய உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த விருது விழா இருக்கிறது. கடந்த நான்கு வருடத்தில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 700 படங்கள் வெளியாகியதில்  zee தமிழ் 120 முதல் 130 படங்களின் திரைப்பட உரிமையை கைப்பற்றியது .அதில் 70க்கும் மேற்பட்ட படங்கள் ஒரு கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிறிய படங்கள். .அந்த படங்கள் அனைத்திற்கும் எங்களது ஆதரவை நாங்கள் அளித்துள்ளோம். மேலும் இன்னும் அதிக திரைப்படங்களை நாங்கள் ஊக்குவிக்க இருக்கிறோம். அதன் தொடக்கமாக இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியை துவங்குகிறோம். இந்த விருதுகளுக்கான தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடைபெறும்.

பரத்வாஜ் ரங்கன்:

zee தமிழ் சினி அவார்ட்ஸ் தேர்வு குழுவில் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறந்தமுறையில் தேர்வுகள் நடைபெறும்.

கரு பழனியப்பன்:

பல விருது விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். இந்த zee தமிழ் சினி அவார்ட்ஸ் 2020-ல் கலந்துகொள்ள முக்கிய காரணம் நிர்வாகம் தலையிடாமல் நாங்கள் 5 பேர் மட்டும் சிறந்த படங்களை தேர்வு  செய்வதற்கான உரிமையை வழங்கியதுதான். தமிழ் சினிமாவின் பெருமை மற்ற மாநிலங்களிலும் இன்னும் அதிகம் தெரிய வைக்க எளிதாக அமைகிறது. பிற மாநில மக்களும் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யலாம்.

பரத்பாலா:

இந்த விழாவிற்கும், தேர்வு குழுவில் என்னை இணைத்ததற்கும் நன்றி. இந்த விழாவை விருது வழங்கும் விழாவாக எண்ணாமல் திறமைக்கு தரும் அங்கீகாரம் என அனைவரும் எண்ண வேண்டும். எதிர்காலத்தில் திரைப்பட கலைஞர்கள் zee தமிழ் அவார்ட்ஸ் எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணம் வர வைக்கும் அளவுக்கு இந்த விருது வழங்கும் விழா இருக்கப் போகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன்:

மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இந்த தேர்வு குழுவில் இணைந்ததற்கு. இதன் மூலம் பார்க்காத திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. நேரம் இல்லாவிட்டாலும் அதற்கான நேரத்தை செலவிட்டு காண இருக்கிறேன்.

சுஹாசினி மணிரத்னம்:

இந்த விருதுக்கான தரம் முதன்மையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவு தேர்வுக்குழு அமைந்துள்ளது. என் அம்மா ZEE  தமிழ் தொலைக்காட்சியை விரும்பி பார்த்து வருபவர். இந்த விருது விழாவில் நான் இணைந்ததை அறிந்த என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நடிகர் கார்த்தி:

ZEE தமிழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்வுக்குழுவினர் மிகப்பெரிய பொறுப்பை எடுத்துள்ளனர், கடினமான வேலைதான் .நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கும். .திரைத்துறையில் எல்லாருக்குமே விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பத்திரிக்கையில் வரும் சிறிய வார்த்தை கூட கலைஞர்களை உற்சாகப்படுத்தும் .அதற்கு தகுந்தாற்போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு.