பிரபல தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்

பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

பிரபல தமிழ் எழுத்தாளரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் திருநெல்வேலியில் காலமானார்.

தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் நெல்லை கண்ணனுக்கு வழங்கப்பட்டிருந்தது. கங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான நெல்லை கண்ணன், முன்னாள் முதல்வர் காமராஜர் தொடங்கி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவருடனும் நட்புறவில் இருந்தவர்.

அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.