“பெரிய மனிதர்கள் ஆவது அப்படித்தான்”: பொதுக்குழுவில் கமல்ஹாசன் பேச்சு!

“தென்னிந்திய” நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

எனினும், பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்களிடையே கமல்ஹாசன் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலமாக திரையில் தோன்றி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

நமது இடத்தில் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்று ஆசைபட்டேன். அதை நடத்த வைத்தவர்களுக்கு நன்றி.

நமக்குள் ஒற்றுமை வேண்டும். என்னைவிட வயதில் இளையவர்களுக்கு நல்ல நட்பும், நேசமும் இருக்கிறது. அதற்காக தான் இளைஞர்கள் எல்லாம் ஒன்று கூடி இப்பொதுக்குழுவை நடத்தி வருகிறார்கள். நாங்கள் எல்லாம் ஒதுங்கியிருந்து ரசித்து வருகிறோம்.

நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடைய மறுப்பாளர்களுக்கும் அழைப்பு விடுங்கள். பெரிய மனிதர்கள் ஆவது அப்படித்தான் என நான் நினைக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.