நடிகர் கமல்ஹாசன் கட்சிப்பெயர் அறிவிப்பு! கொடி அறிமுகம்!!

நடிகர் கமல்ஹாசன் தான் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் சூட்டியிருக்கிறார். இப்பெயரை அவர் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற அவரது கட்சிக் கூட்டத்தில் அறிவித்தார். கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான ரசீதும் பெறப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.

இக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் கமல் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து அறிமுகப்படுத்தினார். “கட்சியின் கொடியை உற்றுப் பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களாகிய நீங்கள்தான். மக்களையும் நீதியையும் மய்யமாகக் கொண்டு இணைக்கும் கட்சி என்பதால் ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயர் வைத்திருக்கிறோம்” என்று விளக்கம் அளித்தார் கமல்.