செய்தி உலகிற்கு நிறைய ’கிரிஷ்மா’க்கள் தேவை!

இந்த வாரம் தொலைக்காட்சி விவாதங்களில் மனம் கவர்ந்தவர் கிரிஷ்மா குத்தார். மணிப்பூரில் இருக்கும் தமிழ் பெண் பத்திரிக்கையாளர். போராட்டக் களத்தில் நிற்பவர்.வியாழனன்று சன் நியூஸில் வீடியோ மூலமும், நேற்று நியூஸ் 7இல் தொலைபேசி மூலமாகவும் கலந்து கொண்டார். சில ஆங்கில தொலைக்காட்சிகளிலும் இவர் பேட்டி கிடைக்கிறது.

மணிப்பூர் வன்முறை, பின்புலம், அரசியல் உள்நோக்கம் என அனைத்தையும் நமக்கு அற்புதமாக விளக்கிக் கூறினார். ஆதாரங்களுடன் அழுத்தம் திருத்தமாக பேசினார். உளறிக் கொண்டிருந்த சங்கி ஒருவரை ”நீங்கள் Uninformed” என்று ஒற்றை வார்த்தையில் அடக்கியது சிறப்பு.

மெய்தி வன்முறையாளர்களுக்கு ஆயுதம் வழங்கியதே மாநில காவல் துறையும் துணை ராணுவமும் தான் எனும் உண்மையை துணிச்சலாக கூறினார் கிரிஷ்மா.

மணிப்பூர் வன்முறையின் அடித்தளம் நிலத்திற்கான போராட்டம், டபுள் எஞ்சின் அரசுகளின் வெறுப்பு அரசியல், வாக்கு வங்கி அரசியல் எனும் சரியான புரிதல் இவரிடம் இருக்கிறது.

செய்தி உலகிற்கு நிறைய கிரிஷ்மாக்கள் தேவை.

பாராட்டுக்கள்!

Arukkutti Periyasamy