”தமிழில் திரைப்பட தலைப்புகள் வைப்பதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்!” – இயக்குனர் வசந்தபாலன்

தமிழ் திரைப்படங்களுக்கு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தலைப்புகள் வைப்பது பெரும்பான்மையாக மாறிவிட்டது வருத்தமளிக்கிறது.

(2006 – 2011) முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் திரைப்பட தலைப்புகள் வைக்கப்பட்டால் வரிவிலக்கு என்ற ஆசையைக் காட்டி தமிழ் திரைப்படத் தலைப்புகளில் இடம்பெற காரணமாக இருந்தார்.

அப்போது வைக்கப்பட்ட தமிழ்த் தலைப்புகள் சில:

வாரணம் ஆயிரம்,

காதல் கொண்டேன்,

தசாவதாரம்,

வல்லமை தாராயோ,

அங்காடித் தெரு,

நான் கடவுள்,

கண்டேன் காதலை,

எந்திரன்,

ஆரண்ய காண்டம்,

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,

தென்மேற்குப் பருவக்காற்று,

நடுநிசி நாய்கள்,

யுத்தம் செய்,ஓ காதல் கண்மணி

7ஆம் அறிவு

-இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி கலைஞர் அறிவிக்காவிட்டால் மேற்கண்ட தலைப்புகளில் பாதி ஆங்கில தலைப்புகளாக மாறியிருக்கும்.

கிருபானந்தவாரியரிடம் திருக்குறள் ஒப்புவித்தால் பரிசு தருவார் என்ற எண்ணத்துடன் மனப்பாடம் பண்ணிய பல நூறு மாணவர்களில் நானும் ஒருவன்.

அது போன்று தமிழில் திரைப்படத் தலைப்புகள் வைப்பதை தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் திரைப்படத்துறைக்கு வலியுறுத்த வேண்டும்.

தமிழ் திரைப்படத் துறைக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது; இருந்தாலும், எதையும் இங்கே வலியுறுத்தாமல் வளருவது இல்லை. தண்ணீர் ஊற்றாமல் முளைப்பதில்லை.

இயக்குனர் வசந்தபாலன்